உள்ளூர் செய்திகள்

லாரி மோதி விபத்து; அரசு பஸ் டிரைவர் பலி

Published On 2022-10-12 12:25 IST   |   Update On 2022-10-12 12:25:00 IST
  • லாரி மோதி விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலியானார்.
  • பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டிய பட்டியை சேர்ந்தவர் சீனிவாச ராகவன் (வயது52). அரசு பஸ் டிரைவரான இவர் சம்பவத்தன்று விருதுநகரில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். ஆர்ப்பாட்டம் முடிந்த பின் சீனிவாச ராகவ ன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

விருதுநகர்-சத்திர ரெட்டிய பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சீனிவாச ராகவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பாண்டியன் நகர் போலீசார் அங்கு வந்து அரசு பஸ் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News