உள்ளூர் செய்திகள்

இளம்பெண், பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயம்

Published On 2023-08-13 06:22 GMT   |   Update On 2023-08-13 06:22 GMT
  • இளம்பெண், பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மூஞ்சிமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜ். இவரது மகள் ஜென்சி(வயது23). இவருக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. பெற்றோர் வீட்டில் இருந்து பி.எட் படித்து வந்தார்.

படிப்பு முடிவை டைந்ததால் கணவர் வீட்டிற்கு செல்லுமாறு ஜென்சியிடம் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் கணவர் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் பெற்றோர் அவரை கண்டித்தனர். இந்த நிலையில் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் ஜோதிராஜ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் துர்காதேவி(38),பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது 15 வயது மகள் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துர்காதேவி வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.

பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை. இதை தொடர்ந்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் துர்காதேவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சுழி நாலூர் பகுதியை சேர்ந்தவர் நாகஜோதி(37). இவரது 17 வயது மகன் ஐ.டி.ஐ. படித்து விட்டு மதுரையில் வேலை பார்த்து வருகிறான். தினமும் வேலைக்கு பஸ்சில் சென்று வருகிறான். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தட்டனூர் போலீஸ் நிலையத்தில் நாகஜோதி புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News