தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தும் பணிகள் தீவிரம்
- ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது.
- இந்தப் பணிகளை தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ நேரடியாக ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவ மனையை ரூ.40 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு இணையாக தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ நேரடியாக ஆய்வு செய்தார்.
கட்டுமான பொருட்கள் தரமாக உள்ளதா?, கான்கீரிட் பில்லர் கம்பிகள் தரமாக உள்ளதா? என அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராஜபாளையம் தொகுதி யின் வளர்ச்சிக்காக தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ெரயில்வே மேம்பால திட்டம் போன்ற திட்டங்கள் எவ்வாறு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதோ அதுபோல் ராஜபாளையம் தொகுதி மக்கள் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரிக்கோ, மதுரை ஆஸ்பத்திரிக்கோ அலையாமல் இருப்பதற்காக அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிழ்ச்சியில் தலைமை மருத்துவர் மாரியப்பன், பொது பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப்பொறியாளர் பால சுப்பிரமணியன், சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ராஜசோழன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.