மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ.83 ஆயிரம் திருட்டு
- மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ.83 ஆயிரம் திருடப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் சரவணன்(வயது43). இவர் அங்குள்ள வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரம் எடுத்தார். மேலும் கையில் ரூ.3 ஆயிரம் வைத்திருந்தார். பணத்தை பையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வைத்தார்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், அவரது மகன் படிக்கும் பள்ளியில் இருந்தும் பேசுவதாகவும், மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடனடியாக பள்ளிக்கு வருமாறும் கூறியுள்ளார். அதிர்ச்சி யடைந்த சரவணன் பள்ளிக்கு சென்றார்.
மோட்டார் சைக்கிளை பள்ளியின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பையை காணவில்லை. யாேரா மர்ம நபர்கள் நோட்டமிட்டு திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அருப்புக்கோட்ைட மேஜித்ரேட் கோர்ட்டில் சரவணன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.