உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்தவர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு

Published On 2022-11-06 07:54 GMT   |   Update On 2022-11-06 07:54 GMT
  • ராஜபாளையம் அருகே தற்கொலை செய்தவர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முருகன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் முருகனின் உடலை உறவினர்கள் எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராமத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி தற்கொலை செய்த நபர் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்ததாக உறவினர்கள் சேதுராமன், வீரராஜ், போஜராஜன், வெங்கட்ராமன், கோபால், சங்கரலிங்கம் ஆகிய 6 பேர் மீது இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News