உள்ளூர் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2023-04-09 09:00 GMT   |   Update On 2023-04-09 09:00 GMT
  • ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டது.
  • 10 பவுன் தாலி செயினை கண்ணி மைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நடராஜா காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கிரகலட்சுமி (வயது 49). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியின் பிள்ளைகளை அவரது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபர் கிரகலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் கிரகலட்சுமி புகார் செய்தார்.

அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச் சேனை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News