உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

Published On 2022-06-14 13:35 IST   |   Update On 2022-06-14 13:35:00 IST
  • கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.

வத்திராயிருப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது தம்பிபட்டி தனியார் மில் அருகே பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இருவரையும் வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது கூமாபட்டி அமச்சியார்புரம் காலனியைச் சேர்ந்த முத்துச்செல்வம் (25), அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (18) என்பது தெரியவந்தது. 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News