உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு சாவு

Published On 2023-04-08 08:40 GMT   |   Update On 2023-04-08 08:40 GMT
  • வாலிபர் தூக்குப்போட்டு இறந்தார்.
  • அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(28), ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்தார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது உறவினர்கள் அவரை காப்பாற்றி சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விக்னேசின் தாய் குருவம்மாள் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News