- திருச்சுழி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. அதிலும் குறிப்பாக ஆலடிப் பட்டி பகுதியில் சமீப கால மாக கஞ்சா விற்பனை விறு விறுப்பாக நடந்து வருவதாக திருச்சுழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெக நாதன் தலைமையில் திருச்சுழி இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கெங்கராஜ் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப் பட்டது. அவர்கள் திருச்சுழி காவல் நிலைய எல்லைப் பகுதிக ளில் தீவிர ரோந்துப் பணி யில் ஈடுபட்டு கண்கா ணித்தனர்.
அப்போது ஆலடிப்பட்டி பகுதியிலுள்ள கல்லறை தோட்டம் அருகே சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டி மேலத்தெரு பகுதியை சேர்ந்த இருளாண்டி என்பவரின் மகன் சக்திவேல் (23) என்பதும், இவர் அந்த பகுதியில் சட்ட விரோதமாக கிலோ கணக்கில் கஞ்சாவை பதுக்கி வைத்து நெடுங்கா லமாக பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் விற்ப னைக்காக வைத்திருந்த சுமார் 1.380 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.