உள்ளூர் செய்திகள்

வாலிபர்கள் தற்கொலை

Published On 2023-05-24 13:35 IST   |   Update On 2023-05-24 13:35:00 IST
  • வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சொக்கலாம்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து(27). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காளிமுத்துவிற்கு கடன் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி முத்துமாரி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோ வில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துபாண்டி(32). இவருக்கு குடிபழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News