உள்ளூர் செய்திகள்

ஆசிரியை-கல்லூரி மாணவிகள் மாயம்

Published On 2022-11-29 07:23 GMT   |   Update On 2022-11-29 07:23 GMT
  • விருதுநகரில் ஆசிரியை-கல்லூரி மாணவிகள் மாயமானார்கள்.
  • சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று பள்ளிக்கு சென்ற அவர் மதியம் விடுப்பு எடுப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவிகள்

வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூர் ராஜீவ் காலனியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவரது மகள் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். வீட்டு வேலைகளை செய்யவில்லை என குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த அவர் திடீரென மாயமானார். சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Tags:    

Similar News