உள்ளூர் செய்திகள்

தமிழ்ச்சோைல புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றவர்கள். 

"தமிழ்ச்சோலை" புத்தக வெளியீட்டு விழா

Published On 2022-06-09 09:57 GMT   |   Update On 2022-06-09 09:57 GMT
  • “தமிழ்ச்சோலை” புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
  • பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடந்தது.

சிவகாசி

சிவகாசி பி.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பில் "தமிழ்ச்சோலை" புத்தக வெளியீட்டுவிழா பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடந்தது.

இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல் பிரதியை சிறப்பு விருந்தினரான சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் தனபால் பெற்றுக் கொண்டு பேசினார். மாணவர்களிடையே கற்றல் ஈடுபாட்டை பெருக்கவும், படைப்பாற்றலை வளர்க்கவும், சிறந்த படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே "தமிழ்ச்சோலை" இதழ் ஆகும்.

விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் வாகேசுவரி வரவேற்றார். கல்லூரியின் கல்விசார் இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவிப்பேராசிரியை சித்ராதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். உதவிப் பேராசிரியர்ரமேஷ் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியைகள் முத்துமாரி,சுதந்திராதேவி, ஜோதி ஆகியோரது முன்னிலையில் தமிழ்த்துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Tags:    

Similar News