உள்ளூர் செய்திகள்

தனியார் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மறியல்

Published On 2023-04-29 08:04 GMT   |   Update On 2023-04-29 08:04 GMT
  • தனியார் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மறியல் செய்தனர்.
  • வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதுவரை கல்லூரி வரக்கூடாது எனக்கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து 2020-ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இந்த கல்லூரியில் 2021-22 கல்வி ஆண்டில் பி.எட். படிப்பில் 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அந்த மாணவர்களுக்கு இதுவரை பருவ தேர்வுகள் நடத்தப்படவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கேட்டு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தேர்வு எழுத அனுமதி கேட்டு கல்லூரி நுழைவு வாயில் முன்புள்ள வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் முத்துமாரி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 5-ந் தேதி கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது. வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதுவரை கல்லூரி வரக்கூடாது எனக்கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News