உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் வழிப்பறி

Published On 2023-05-12 08:07 GMT   |   Update On 2023-05-12 08:07 GMT
  • விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (38). இவர் தனது மகளுடன் ஜவுளி கடைக்கு சென்று விட்டு ராஜபாளையம் மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களின் பின்னால் வந்த ஒரு மர்ம நபர் மகள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார்.

அப்போது அவர் சங்கிலியைப் பிடித்துக் கொண்டதால் பாதி சங்கிலியை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சீதாலட்சுமி புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News