- சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கொள்ளலாம்.
விருதுநகர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை யொட்டி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 100-க் கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய வர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர் காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை அனைத்து கல்விச் சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்று டன் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொள்ளலாம்.
இம்முகா மில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் https://forms.gle/TH4R1Djmv8Z7SkpU என்ற Google Form-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கொள்ள லாம்.
இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.