உள்ளூர் செய்திகள்

தந்தையை கொலை செய்த மகன் கைது

Published On 2023-04-13 08:25 GMT   |   Update On 2023-04-13 08:25 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை மல்லி போலீசார் கைது செய்தனர்.
  • மது போதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மனைவி சித்ரா (45). இவர்களது மகன் மணிகண்டன்(27). மணிகண்டனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மணிகண்டன் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஆறுமுகம் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் தனது வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணபேரி கிராம நிர்வாக அலுவலர் உமாராணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்.

அப்போது ஆறுமுகம் மதுபோதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்தார்.

ஆனால் ஆறுமுகத்தின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உமாராணி மல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 10-ம் இரவு குடிபோதையில் வந்த ஆறுமுகம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தும், அப்போது மகன் மணிகண்டன் தாக்கியதில் ஆறுமுகம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஆறுமுகம் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Tags:    

Similar News