உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரர் மகன் பாறையில் மோதி சாவு

Published On 2022-06-30 08:33 GMT   |   Update On 2022-06-30 08:33 GMT
  • மேல் பகுதியில் இருந்து குதித்தபோது பாறையில் மோதியதில் முகத்தில் காயம் ஏற்பட்டு பாறையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  • இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருமங்கலம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைனில் குடியிருப்பவர் கார்த்திகைமணி. இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் முருகப்பன்(19), நண்பர்களுடன் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள வழுக்குப் பாறையின் அருகே உள்ள தண்ணீர் கிடங்கில் குளிக்க சென்றார்.

மேல் பகுதியில் இருந்து குதித்தபோது பாறையில் மோதியதில் முகத்தில் காயம் ஏற்பட்டு பாறையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News