உள்ளூர் செய்திகள்

துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல்

Published On 2023-03-02 08:06 GMT   |   Update On 2023-03-02 08:06 GMT
  • துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவவீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • இவரிடம் லைசென்சுடன் இரட்டை குழல் துப்பாக்கி உள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் அருகே உள்ள கீழூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன், முன்னாள் ராணுவ வீரர். இவரிடம் லைசென்சுடன் இரட்டை குழல் துப்பாக்கி உள்ளது.

இவரது மனைவி தங்கம்(வயது49). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் திருமணத்திற்காக ஆபிரகாம் லிங்கன் கடன் வாங்கி இருந்தார். இதற்காக மாதந்தோறும் தனக்கு வரும் பென்சன் பணத்தை கொடுத்து வருகிறார்.

சம்பவத்தன்று பென்சன் பணத்தில் ரூ.3ஆயிரத்தை மதுகுடிக்க செலவழித்ததாக கூறப்படுகிறது. இதனை தங்கம் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் மீண்டும் பணம் கேட்டு மனைவியை தொல்லை செய்துள்ளார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆபிரகாம் லிங்கன் வீட்டில் இருந்த துப்பாக்கியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாம் லிங்கனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News