உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவி மாயம்

Published On 2023-05-09 06:20 GMT   |   Update On 2023-05-09 06:20 GMT
  • பிளஸ்-2 மாணவி மாயமானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது39). இவரது 17வயது மகள் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதினார். நேற்று தேர்வு முடிவு வெளியானது. அதில் அந்த மாணவி 419 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து உறவினரின் வீட்டிற்கு தங்கையுடன் சென்று வருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால் உறவினர் வீட்டில் தங்கையை மட்டும் இறக்கி விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு அய்யனார் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News