உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

Published On 2022-08-08 09:13 GMT   |   Update On 2022-08-08 09:13 GMT
  • மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியானார்.
  • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் போத்திராஜ் (வயது 42). இவர் திருநெல்வேலி செல்வதற்காக சாத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலை நடுவே சென்ற ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் போத்திராஜூம், சாலையில் சென்ற நபரும் படுகாயம் அடைந்தனர். இதில் போத்திராஜ் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த நபர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? என்பது தெரியவில்லை.

இதுபற்றிய புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News