உள்ளூர் செய்திகள்

கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மரணம்; கட்சியினர்-முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

Published On 2023-04-18 08:27 GMT   |   Update On 2023-04-18 08:27 GMT
  • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மரணத்திற்கு கட்சியினர்-முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
  • இன்று மாலை நல்லடக்கம் நடக்கிறது.

சிவகாசி

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை கே.தவசிலிங்க ஆசாரி (வயது93). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி யின் வீட்டில் வைக்கப் பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Tags:    

Similar News