உள்ளூர் செய்திகள்

மதுபாட்டில்களை விற்ற 2 பேர் கைது

Published On 2023-09-05 06:43 GMT   |   Update On 2023-09-05 06:43 GMT
  • திருச்சுழி அருகே மதுபாட்டில்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 15 மதுபாட்டில்களும், ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதாக திருச்சுழி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குலசேகர நல்லூர் பகுதியில் சாக்கு பையுடன் நின்று கொண்டி ருந்த குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் செல்வம் (வயது 51) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான கூறிவந்தார். இதில் சந்தேகம் அடைந்த போாலீசார் அவரது பையை சோதனை செய்ததில் சட்ட விரோதமாக சுமார் 75 மதுபான பாட்டில் கள் விற்பனைக்காக வைத் திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருச்சுழி போலீசார் அவற்றை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் மேலகண்ட மங்கலம் பகுதியிலும் திருச்சுழி போலீசார் ரோந்து சென்ற போது அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் புலிக்குறிச்சி பகுதியை சேர்ந்த கடம்பன் மகன் மருதுபாண்டி (வயது 33) என்பவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் இருந்து சுமார் 15 மதுபாட்டில்களும், ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்த னர். பின்னர் மருதுபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News