உள்ளூர் செய்திகள்

கண் தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

Published On 2023-08-30 08:32 GMT   |   Update On 2023-08-30 08:32 GMT
  • உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
  • விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கண்தானம் செய்த 30 குடும்பங்களுக்கு பாரட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் கண்தானத்திற்கு சிறப்பாக செயல்பட்ட தற்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணிக்கு, பார்வை யிழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்டமேலாளர் பொன்னுசாமி, கண் மருத்துவத்துறைத்தலைவர் பாரதிராஜன், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் சீதாலட்சுமி ஆகிேயாருக்கு நினைவு நினைவு பரிசு வழங்கினார்.

விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.

பின்னர் அவர் பேசிய தாவது:-

கருவிழி கண் தானம் மட்டுமல்லாமல் நம் உடலின் மிகமுக்கியமான பகுதிக ளான சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல்கள் போன்ற உறுப்புகளையும் தானம் அளிக்கலாம். இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வைக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கண்கள் போன்ற உடல் உறுப்புகளை சரியான நேரத்தில் தேவைப்படு வோருக்கு மாற்றம் செய்யும் போது, அவரது வாழ்க்கை யையும், உயிரையும் காப்பாற்ற முடிகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து வதன் மூலமாக ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடல் உறுப்புகளை தான மாக வழங்குவது பல உயிர்களை காப்பாற்று வதற்கான வாய்ப்பாக அமைகிறது என்பதை அறிந்து கொள்ள செய்ய முடியும்.

இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் வெங்கடேஷ் பிரஜ்னா, அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி மேலாளர் சரவணன், அரசு மருத்துவர்கள், கண் தானம் செய்த குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News