உள்ளூர் செய்திகள்

பெண்கள் பள்ளியில் சுதந்திர தின விழா

Published On 2023-08-16 08:47 GMT   |   Update On 2023-08-16 08:47 GMT
  • பெண்கள் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
  • தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில், ஓரிரு வாரங்களில் மிதிவண்டி வழங்கப்படும், ராஜ பாளையம் தொகுதியில் கடந்த வருடம் அரசு பள்ளி களில் ஆண்டுவிழா நடத்தப்பட்டது.

அதுபோல் இனிவரும் வருடங்களில் அரசே தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். தொடர்ந்து போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது. இதில் தி.மு.க. நகர செயலா ளர்கள் ராம மூர்த்தி, மணிகண்டராஜா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News