உள்ளூர் செய்திகள்

 வீடு தீப்பிடித்து எரிந்ததில் சேதமடைந்த பொருட்கள்.

வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

Published On 2022-07-03 11:54 GMT   |   Update On 2022-07-03 11:54 GMT
  • திரருச்சுழியில் வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.
  • வழக்கம்போல் இரவு நேரத்தில் வீட்டில் விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

காரியாபட்டி

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் சுந்தரராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் சுந்தர் -ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இருவரும் தினந்தோறும் இரவு நேரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வழக்கம்போல் இரவு நேரத்தில் வீட்டில் விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

காலையில் அதிக சத்தத்துடன் பல்பு வெடித்ததாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.

இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்த நிலையில் அருப்புக்கோட்டை தீயணை ப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது குறித்து திருச்சுழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரெயில் நிலையம் பகுதியில் புகை மண்டலமாக தெரிந்ததால் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News