உள்ளூர் செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் சுற்றுலா
- இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
- இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் மாணவர்கள் அருகில் உள்ள குகை கோயிலுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். திருமலாபுரம் பகுதியில் இரு மையங்கள் செயல்படுகிறது.
மையத்திற்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பாடத்தில் கற்றுள்ள குகை கோவில் குறித்து நேரடி அனுபவத்தை ஏற்படுத்தும் வகையிலும், திருவண்ணாமலை அருகே உள்ள சிவன் குகை கோவிலுக்கு இல்லம் தேடி கல்வி மைய மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குகைக் கோவில் குறித்து விளக்கப்பட்டது.
இந்த பகுதியில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ள பகுதிகளையும் மாணவர்கள் பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தார்.