உள்ளூர் செய்திகள்

அய்யனார் கோவில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.

ராஜபாளையத்தில் கனமழை

Published On 2022-10-13 08:53 GMT   |   Update On 2022-10-13 08:53 GMT
  • ராஜபாளையத்தில் கனமழை பெய்தது. இதனால் அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ராஜபாளையம்

ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது.

மழையின் காரணமாக அய்யனார் கோவில், நீராவி ஆறு, 6-வது மைல் நீர்த்தேக்க ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம்ராஜா ஆலோசனையின்படி அய்யனார் கோவில் ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் 6-வது மைல் நீர்த்தேக்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதிதெரிவித்தார்.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நகர் பகுதியில் தொடர்மழை பெய்ததால் நிலத்தடி நீரும் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News