உள்ளூர் செய்திகள்
- அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகில் உள்ள வெள்ளைகோட்டையை சேர்ந்தவர் முத்துராசு (32). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன், தலைமை காவலர் அன்பழகன் மற்றும் போலீசார் முத்து ராசுவை பிடித்து விசாரணை செய்தனர். அப்ேபாது அவரிடம் குட்கா பண்டல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, முத்துராசு மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதை பொதுமக்கள் பாராட்டினர்.