உள்ளூர் செய்திகள்

டிராவல்ஸ் அதிபரிடம் மோசடி-தம்பதி மீது வழக்குப்பதிவு

Published On 2023-09-06 12:12 IST   |   Update On 2023-09-06 12:12:00 IST
  • டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • பால சுப்பிரமணியம் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மங்காபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த–வர் முத்துக்குமார் (வயது 35). இவரது மனைவி விஜய–லட்சுமி (30). இவர்கள் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களது உறவி னர் பாலசுப்பிரமணி–யம் (50).

இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டிரா வல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கண வன், மனைவி இருவரும் சென்று தாங்கள் நடத்தி வரும் ஏலச்சீட்டில் சேருமா றும், அதில் அதிக வட்டித் தொகை கிடைப்பதாகவும், அதன் மூலம் லாபம் பெற–லாம் என்றும் ஆசை வார்த் தை–களை கூறியுள்ள–னர்.

இதனை நம்பிய பால சுப்பிரமணியம் ஏலச் சீட்டில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பிலான சீட்டில் சேர்வதாக கூறினார். இதில் மாத தவணை யாக கடந்த 8.9.2021 முதல் 13.10.2022 வரையிலான காலத்தில் ரூ.11 லட்சத்து 73 ஆயிரத்தை தம்பதியினரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்துள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்தும் சீட்டுத் தொகையை தராமல் தம்ப தியினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர். பல முறை கேட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பணத்தை திரும்ப கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து பாலசுப்பிர மணியம் ஓசூரில் இருந்து ராஜபாளையத்திற்கு நேரில் வந்து முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டிக்கி டந்ததோடு, இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த பலரிடம் ஏலச்சீட்டு நடத்து வதாக கூறி பண மோசடி யில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. பின்னர் பால சுப்பிரமணியம் ராஜ பாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் இன்ஸ் பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ் பெக்டர் மோகன் ஆகியோர் முதல்கட்ட விசாரணை நடத்தி ஏலச் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட முத்துக்குமார், அவரது மனைவி விஜய லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய் துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இதேபோல் வேறு எத்தனை பேர் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News