உள்ளூர் செய்திகள்

தீப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து

Published On 2022-10-14 08:18 GMT   |   Update On 2022-10-14 08:18 GMT
  • தீப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
  • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி பெரியகுளம் காலனியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் நாகனா புரம் புதூர் ரோட்டில் தீப்பெட்டி கம்பெனி நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று இவரது கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் நந்தகுமார் மற்றும் கட்டிட உரிமையாளர் கணேஷ் ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News