உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2023-04-18 08:27 GMT   |   Update On 2023-04-18 08:27 GMT
  • விருதுநகர் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வடமலைகுறிச்சி இந்திராகாலனியை சேர்ந்தவர் முத்து(வயது55). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துவின் ராஜ்குமார் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வெல்லங்குடியை சேர்ந்தவர் நாராயணன்(28), வேன் டிரைவர். இவர் தனது வேனை பழுது நீக்கிவிட்டு மதுரையில் இருந்து ஊருக்கு திரும்பி னார். அப்போது வீரவ நல்லூரை சேர்ந்த மனோஜ்(30) உடன் சென்றார். விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகே வேன் சென்றபோது மனோஜ் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் நாராயணன் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News