உள்ளூர் செய்திகள்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-06-29 08:41 GMT   |   Update On 2023-06-29 08:41 GMT
  • அன்னப்பராஜா பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
  • மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு மன்றத்தின் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடை பெற்றது. தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் பேசுகையில், இன்றைய நாளில் மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால், கல்வியில் நாட்டமின்மை, ஒழுக்கக்கேடுகள், சமூகவிரோதச் செயல்பாடுகள், சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இவைகளிலிருந்து மாணவர்கள் விடுபடவேண்டும் என்றார். கூட்டத்தில் போதை தடுப்பு மன்ற உறுப்பினர்களும் மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார். 

Tags:    

Similar News