உள்ளூர் செய்திகள்
மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்
- ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தன.
- இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட அளவிலான இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர். நாளை (11-ந் தேதி) 230 மாணவிகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு பெறும் மாணவ-மாணவிகள் பிப்ரவரி மாதம் 11-ந் தேதி மாநில அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் நடத்தினர்.