உள்ளூர் செய்திகள்
- மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் வள்ளியம்மாள்(65). பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். இவரது மகன் மாரிசெல்வம். சம்பவத்தன்று வள்ளியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாரிசெல்வம் எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களிடம் நீங்கள் யார்? எதற்காக அவனை தேடுகிறீர்கள் என வள்ளியம்மாள் கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் வைத்திருந்த அரிவாளால் வள்ளியம்மாளை வெட்டி விட்டு தப்பி சென்றனர். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகார் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.