உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் போராட்டம்
- மத்திய அரசு ‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப்பெறக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில், சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
- நகர தலைவர் பட்சிராஜா வன்னியராஜ் தலைமை தாங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
'அக்னி பத்' திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில், சத்தியாகிரக போராட்டம் நகர அஞ்சலகம் முன்பு நடந்தது. நகர தலைவர் பட்சிராஜா வன்னியராஜ் தலைமை தாங்கினார். சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராஜ்மோகன், மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் முருகேசன், இலக்கிய அணி சுந்தரம், ஆர்.டி.ஐ. மாநில துணைத் தலைவர் சுந்தரம், மாநில துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஆறுமுகம், மகளிர் அணி மாநில இணைச் செயலாளர் காளீஸ்வரி, மம்சாபுரம் ஜெயக்குமார், வத்திராயிருப்பு லட்சுமணன், வசந்தம் சேதுராமன், துள்ளுக்குட்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் காமராஜர் நன்றி கூறினார்.