உள்ளூர் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-07 08:18 GMT   |   Update On 2022-09-07 08:18 GMT
  • ராஜபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர், சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராஜபாளையம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் வீரபாண்டியன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதை கண்டித்தும், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி அரசரடி பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடந்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமை தாங்கினார். இதில் கணேசமூர்த்தி, வழக்கறிஞர் பகத்சிங், வரதராஜன், சேத்தூர் நகரச் செயலாளர் ராஜா, அய்யணன், மாயாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News