மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
- சமத்துவபுரம் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
- அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ஆதித்தனேந்தல் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவ புரம் குடியிருப்பு உள்ளது. இங்கு 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட வீடுகள் மராமத்து செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிறது. எனவே சமத்துவ புரம் வீடுகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆதித்த னேந்தல் சமத்துவபுரத்தில் வீடுகளை புனரமைக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படிய அதிகாரிகளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து வீடுகளை பராமரிக்க பாதிப்புகளுக்கு ஏற்றவாறு ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.51 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிதி பரா மரிப்பு பணிக்கு போதாது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என சமத்துவ புரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை கண்டித்தும், கூடுதல் பராமரிப்பு நிதி ஒதுக்க கோரியும் இன்று காலை நரிக்குடி-ராமேசு வரம் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட் டோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் நிதி விவகாரம் ெதாடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.