உள்ளூர் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2022-07-19 08:52 GMT   |   Update On 2022-07-19 08:52 GMT
  • வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
  • இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). சம்பவத்தன்று இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விஜயகுமார் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன், 4 கிராம் நகை, ரூ,1000 ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை, பணத்தை கொள்ளை யடிப்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News