உள்ளூர் செய்திகள்

மினி பஸ் மோதி சிறுவன் பலி

Published On 2023-11-19 07:26 GMT   |   Update On 2023-11-19 07:26 GMT
  • மினி பஸ் மோதி சிறுவன் பலியானான்
  • தவறான பாதையில் மினி பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரை வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

அருப்புக்கோட்டை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் திவான். இவரது தாய் மீரான்பீவி (வயது 70), மனைவி, 3 வயது மகன் தானிஷ்அகமது ஆகியோர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக இன்று காலை வந்தனர்.

அருப்புக்கோட்டை புது பஸ் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடிப்பதற்காக மதுரை சாலையில் நடந்து சென்றனர். அப்போது தவறான வழியில் வேகமாக வந்த மினி பஸ் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த தானிஷ்அகமது சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தான். மீரான் பீவி, திவானின் மனைவி மற்றும் அங்கு நின்றிருந்த கருப்பசாமி, லட்சுமிபிரியா ஆகியோர் காயம் அடைந்த னர்.

தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த வர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

தவறான பாதையில் மினி பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரை வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags:    

Similar News