உள்ளூர் செய்திகள்
- ராஜபாளையம் அருகே நியாயவிலை கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
- இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமியாபுரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைய இருக்கும் நியாய விலை கடை கட்டித்திற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து பொதுநிதியிலிருந்து ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.