உள்ளூர் செய்திகள்

கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

Published On 2023-04-09 14:34 IST   |   Update On 2023-04-09 14:34:00 IST
  • கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
  • உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரேசுவரி கல்வியியல் கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலர் திலீபன்ராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கருணாகரபிரபு போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினார்.

சமூக நலத்துறை அலுவலர் ஜாஸ்மின், கண் மருத்துவர் அழகர்ராஜ், வட்டாட்சியர் ரங்கசாமி, கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பேசினர். உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News