உள்ளூர் செய்திகள்

நின்றிருந்த லாரி மீது மோதி முதியவர் பலி

Published On 2023-05-09 06:19 GMT   |   Update On 2023-05-09 06:19 GMT
  • அதிவேமாக சென்ற மோட்டார் சைக்கிள் நின்றிருந்த லாரி மீது மோதி முதியவர் பலியானார்.
  • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர் நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மோகன் (58). இவர் சம்பவத்தன்று வெம்பக்கோட்டை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில்அதி வேகமாக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்துதகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News