உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

Published On 2023-06-02 07:33 GMT   |   Update On 2023-06-02 07:33 GMT
  • இளம்பெண் மாயமானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மலைக்கனி. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மலைக்கனி வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மலைக்கனி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News