உள்ளூர் செய்திகள்

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

Published On 2023-10-01 08:12 GMT   |   Update On 2023-10-01 08:12 GMT
  • மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பரளச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள கள்ளக்காரி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி வள்ளி (45). கடந்த 10 வருடங்களாக மனைவியை மாரிமுத்து அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது மனைவியின் தலையில் மாரிமுத்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

அதைப் பார்த்து அங்கிருந்த அவர்களின் மகள் கூச்சலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். உடனே மாரிமுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இருந்த வள்ளியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் பரளச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News