உள்ளூர் செய்திகள்

விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி படுகாயம்

Published On 2023-06-24 14:09 IST   |   Update On 2023-06-24 14:09:00 IST
  • விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி படுகாயமடைந்தார்.
  • சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர்

சாத்தூர் அருகே உள்ள மேட்ட மலையில் சிவகாசி சாத்தூர் மெயின் ரோட்டில் சரக்கு வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளா னது. இதில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள், 3 சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதிய சரக்கு வாகனம், சாலையோர டீக்கடையில் அமர்ந்திருந்த பட்டாசு ஆலை தொழிலாளி சோலையப்பன்(வயது68)என்பவர் மீதும் மோதியது.

இதில் படுகாய மடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசார ணையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர் நெல்லையை சேர்ந்த சஞ்சய் காந்தி என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News