உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் மோசடி செய்த தம்பதி

Published On 2023-09-08 07:55 GMT   |   Update On 2023-09-08 07:56 GMT
  • மூதாட்டியிடம் ரூ.11¾ லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
  • விசாரித்தபோது கடந்த 2019-ம் ஆண்டு தனியார் வங்கியிடம் அந்த நிலம் அடமானம் வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

விருதுநகர்

விருதுநகர் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் குருவம்மாள்(வயது 68). இவர் அல்லம்பட்டி ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த தம்பதி திருப்பதி- நல்லதங் காள் ஆகியோருக்கு சொந்த மான நிலத்தை பேரம் பேசி வாங்கிக்கொள்ள சம்ம தித்தார். பின்னர் கடந்த டிசம்பர் 2020 முதல் ஜனவரி 2022 வரை ரூ.15¾ லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த தம்பதியினர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தராமல் காலம் கடத்தி யுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நிலம் குறித்து விசாரித்தபோது கடந்த 2019-ம் ஆண்டு தனியார் வங்கியிடம் அந்த நிலம் அடமானம் வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதன் பேரில் ரூ. 4 லட்சத்தை அந்த தம்பதி மூதாட்டிக்கு திரும்ப கொடுத்தனர். மீதி பணத்தை கொடுக்கவில்லை.

மூதாட்டி பணத்தை கேட்டபோது பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். மூதாட்டி அங்கு சென்றபோது பணத்தை திருப்பதித்தர முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மூதாட்டி வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்படி விருதுநகர் மேற்கு போலீசார் அந்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News