உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் தற்கொலை

Published On 2022-08-23 08:45 GMT   |   Update On 2022-08-23 08:45 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (23), ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மம்சாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நரிக்குடி சமத்துவ புரத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 59). மது பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த துரைராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் மாரி கொடுத்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சுழி அருகே உள்ள வீரசோழனைச் சேர்ந்தவர் பிச்சை (51). கூலித்தொழிலாளியான இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதனால் விரக்தியடைந்த பிச்சை வீட்டின் அருகே உள்ள கண்மாய்க்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் முத்துமாரி (57). குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணவர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News