பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் மாயம்
- பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் மாயமாகினர்.
- வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
திருத்தங்கல் என்.ஜி.ஓ. நகர் கண்ணகி காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38) இவர் கியாஸ் அடுப்பு பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்தார். சம்பவத் தன்று வேலைக்கு சென்ற சரவணன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் முத்தால்நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பெண் சம்பவத் தன்று வீட்டில் இருந்து திடீ ரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.வெம்பக்கோட்டை அருகே உள்ள ஆ.லட்சுமியா புரத்தைச் சேர்ந்தவர் ராஜ லட்சுமி. இவரது மகள் மாலதி (வயது 21). என்ஜினீய ரிங் பட்டதாரியான இவர் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
விஜய கரிசகுளம் பகுதி சேர்ந்த பிளஸ்-2 மாணவி யும் மாயமானார் இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.