உள்ளூர் செய்திகள்

தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2023-02-23 09:47 GMT   |   Update On 2023-02-23 09:47 GMT
  • தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(36), சுமை தூக்கும் தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த கருப்பசாமி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் மாணிக்க வாசகம்(30). இவரது மனைவி கற்பகமணி. சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக கற்பகமணி விஷம் குடித்தார்.

ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மனைவியின் விபரீத முடிவால் வெறுப்படைந்த மாணிக்கவாசகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள அர்ச்சனாபுரத்தை சேர்ந்தவர் சிவவேல்(35). இவரது மகன் 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிவவேல், மகன் இறந்த துக்கத்தில் சம்பவத்தன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News