- மாணவிகள் உட்பட 3 பேர் மாயமானார்கள்.
- வெம்பக்கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் சுபலட்சுமி (20). இவர் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற சுபலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகள்
மல்லாங்கிணறு அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மாயமா னார். இது குறித்து மல்லாங் கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள கீழகோதை நாச்சியார் புறத்தைச் சேர்ந்தவர் சோபியா. இவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று தேவாலயத்துக்கு செல்வ தாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.